பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானத்தில் திடீர் மாற்றம்

Post a Comment

பாடசாலை நேர அதிகரிப்பு தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்த புதிய தீர்மானம்

பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலமாக நீடிக்கும் தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது

கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது

2022ஆம் ஆண்டுக்கான புதிய தவணையின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில், பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலமாக நீடிப்பதற்கு முன்னராக கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்திருந்தது

 

இந்த ஆண்டுடன் தொடர்புடைய பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு 139 நாட்கள் வரையறுக்கப்பட்ட கால அவகாசம் காணப்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது

அத்துடன் பாடசாலை நேரத்தை ஒரு மணித்திலாயம் வரை நீட்டிப்பதன் மூலம் கற்பித்தலுக்கான காலத்தை கூடுதலாக வழங்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது

 

மேலும், கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட பின்னரும் பாடத்திட்டத்தை உள்ளடக்க முடியாத பட்சத்தில், மூன்றாம் தவணையின் போது, சனிக்கிழமைகளில் பாடசாலைகளை நடத்துவது குறித்தும் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

எனினும், குறித்த தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது

The post பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானத்தில் திடீர் மாற்றம் appeared first on MASS EDUCATION.



from MASS EDUCATION https://ift.tt/LEaTbrF
via IFTTT

Related Posts

Post a Comment